September 26, 2015

தியாகி திலீபனின் நினைவு நினைவு நிகழ்வு சிட்னியில் அனுஷ்டிப்பு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், இந்திய படைகளுக்கு எதிராக உண்ணாநிலை அறப்போர் நடத்தி உயிர் நீத்த தியாக தீபம் லெப்.கேணல். திலீபனின் 28 வது ஆண்டு நிகழ்வு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றது.

அவுஸ்திரேலிய நேரப்படி மாலை 04 மணிக்கு சிட்னியில் உள்ள ரொக் வுட் மயானத்தில் நிகழ்வு இடம்பெற்றது.முதல் நிகழ்வாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 14 ஆம் திகதி உண்ணாவிரதத்தை ஆம்பித்த திலீபன் 12 நாள்கள் நீராகரமின்றி அகிம்சை வழியில் போராடி உயிர் நீத்தார்.

No comments:

Post a Comment