September 30, 2015

அகில இலங்கை ரீதியில் சிறந்த பெண் சாரணியாக வேம்படி மாணவி!

அகில இலங்கை ரீதியில் சிறந்த பெண் சாரணி விருதை யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி யாழினி இராஜேந்திரன் பெற்றுள்ளார்.

இலங்கை பெண் சாரணி மன்றத்தால் இந்த ஆண்டே இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்பது மாகாண பெண் சாரணிய அமைப்புகளிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் யாழினி சிறந்த பெண் சாரணி யாகத் தெரிவானார்.
யாழினி 2013ஆம் ஆண்டு ஜனாதிபதி சாரணிய விருதைப் பெற்றவராவார். யாழ்.மாவட்ட ஆணை யாளர் திருமதி நீலா தர்மகுலசிங்கத்தின் வழிநடத்தலில் குறித்த மாணவி போட்டிகளில் பங்குபற்றியிருந்தார்.

No comments:

Post a Comment