September 3, 2015

உள்­ள­க ­வி­சா­ர­ணையில் தமிழர்களுக்கு நம்­பிக்கை இல்லை ;கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ரொபின்!

உள்­ளக விசா­ர­ணையில் தமிழ்­மக்­க­ளுக்கு என்றும் நம்­பிக்கை இருந்­த­தில்லை. அத­னா­லேயே அன்­றி­லி­ருந்து நாம் சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்­தி­வ­ரு­கின்றோம். அமெ­ரிக்கா சொல்­கின்­ற­தென்­ப­தற்­காக நாம்அதனை
ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. எனவே சர்­வ­தேச விசா­ர­ணையை நடத்தி குற்­றம்­செய்­த­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்கும் அதே­வேளை பாதிக்­கப்­பட்ட தமிழ்­மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­ட­வேண்டும். அத­னூ­டாக நாட்டின் நீண்­ட­கால இனப்­பி­ரச்­சினைக்கு நிரந்­தர தீர்வு எட்­டப்­ப­ட­வேண்டும் என்­பதே எமது நிலைப்­பாடு என தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பின் அம்­பா­றை­மா­வட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.கே.கோடீஸ்­வரன் (ரொபின்) தெரி­வித்தார்.
அவர் இது தொடர்­பாக மேலும் கூறு­கையில்:
அமெ­ரிக்கா உல­க­நா­டு­களில் செய்­து­வரும் இரா­ஜ­தந்­தி­ர­ செ­யற்­பா­டு­களை உல­க­றியும். இறு­தி­யுத்­தத்தில் போர் ­நி­ய­மங்­க­ளுக்கு அப்பால் தமிழ்­மக்கள் இனப்­ப­டு­கொ­லை­செய்­யப்­பட்ட சம்­பவம் பார­தூ­ர­மா­னது. அதனை வெறு­மனே உள்­ள­க­வி­சா­ரணை மூலம் விசா­ர­ணை­செய்தால் உரிய நீதி கிடைக்­காது. அதற்­கா­கவே அன்­றி­லி­ருந்து சர்­வ­தே­ச­ வி­சா­ர­ணையைக் கோரி­வ­ரு­கின்றோம்.
இன்­றைய ஜனா­தி­பதி மீது நம்­பிக்கை வைத்­துள்ளோம். நாட்டின் இனப்­பி­ரச்­சினைக்கு பாரா­ளு­மன்­றமே தீர்­வு­ கா­ண­வேண்டும் என்றும் கூறி­யுள்ளார். எனவே மக்கள் பிர­தி­நி­திகள் இந்த நீண்­ட­கால பிரச்­சி­னை­யைத்­தீர்த்­து­வைக்க ஜனா­தி­பதி வழங்­கிய இச்­சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்டும்.
காயப்­பட்­ட­வர்­க­ளுக்­குத்தான் காயத்தின் வலி தெரியும். வலி­க­ளுக்கு ஒத்­தடம் கொடுத்து அடக்­கு­வ­தற்கு அப்பால் அதற்­கான காரணம் கண்­ட­றி­யப்­பட்டு நீதி கிடைக்­கப்­பெ­ற­வேண்டும்.எமது மக்­களின் உரி­மைகள் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும்.
கிழக்கில் நடை­பெற்ற கொக்­கட்­டிச்­சோ­லை­ப­டு­கொலை வீர­மு­னை,சத்­து­ருக்­கொண்­டான், நற்­பிட்­டி­மு­னை, கிழக்குப் பல்­க­லைக்­க­ழகம், காரை­தீ­வுபோன்ற படு­கொ­லை­க­ளுக்கு இன்னும் நீதி கிடைக்­க­வில்லை.
காணா­மல்­போனோர் விவ­கா­ரமும் இழு­பட்­டு­கொண்­டு­வ­ரு­கி­றது. வரு­டக்­க­ணக்கில் விசா­ர­ணையே செல்­லும்போல் தெரி­கி­றது. அதிலும் நீதி­யான தீர்வு கிடைக்கும் அறிகுறி தென்படவில்லை.
இந்நிலையில் உள்ளகப்பொறிமுறையில் நம்பிக்கை ஏற்படவில்லை. எனவே தான் சர்வதேச விசாரணையில் நம்பிக்கை கொண்டு அதனை தொடர்ச்சியாக கோரிவருகின்றோம். இன்றைய முக்கிய கால கட்டத்தில் அவை தீர்மானிக்கப்பட்டு புரை யோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு இன்றைய ஜனாதிபதி தலைமையில் நிரந்தர தீர்வு காணப்படவேண்டும்.

No comments:

Post a Comment