September 30, 2015

முல்லைத்தீவிலேயே மிக மோசமான வறுமை!

ஐநா மன்றம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையொன்றில் இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே மிக மோசமான வறுமை நிலவுகின்றது
என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  ஓப்பீட்டளவில், கொழும்பு மாவட்டத்தில் ஒன்று புள்ளி நான்கு வீதமானவர்களே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 30 வீதமானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. poor

இதேவேளை முல்லைத்தீவைப் போன்று யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமாகிய கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 13 வீதமானவர்கள் வறுமையில் வாடுவதாக அந்த அறிக்கை கூறுகின்றது.

No comments:

Post a Comment