September 15, 2015

ஈருருளிப் பயணம் 16வது நாளான இன்றைய தினம் பிரான்ஸ் சில்ரிகைம் என்ற இடத்தை வந்தடைந்தது(படங்கள் இணைப்பு)

தமிழினப் படு கொலைக்கு நீதி வேண்டி ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம், 16வது நாளான இன்றைய தினம் (15.09.2015) பிரான்ஸ் சில்ரிகைம் என்ற இடத்தை வந்தடைந்தது.

இன்று காலை 8மணியளவில் பால்ஸ்பூர்க் என்ற இடத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம், அந் நகர நகரபிதாவைச் சந்தித்து, மனு கையளிக்கப்பட்டதுடன் தொடர்ந்து சவேர்ன் என்ற இடத்தில், அந் நகர, மாநகர சபை முதல்வரைச் சந்தித்து மனு கையளிக்கப்பட்டதுடன், தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை நடாத்த வேண்டும் எனவும், அதற்கு பிரான்ஸ் அரசிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவரிடம் வலியுறுத்தப் பட்டது.
இவ் வேளை பிரான்ஸ் நாட்டின் பத்திரிகைகளும் இவ் ஈருருளிப் பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி பிரசுரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. சீரற்ற காலநிலையிலும் 70கி.மீ பயணித்து சில்ரிகைம் என்னும் இடத்தில் நிறுத்தம் செய்யப்பட்டு மீண்டும் நாளை ஆரம்பமாகும்.
நாளை 16.09.2015அன்று ஸ்ராஸ்பூர்க் நகரை வந்தடையும் ஈருருளிப் பயணம், பி.பகல் 3 மணியளவில் ஸ்ராஸ்பூர்க் நகரில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தை வந்தடைந்து, அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமும் அதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாட்டு துணைத் தூதரகங்களை ஊடறுத்து ஐரோப்பிய ஆலோசனை சபை வரை ஈருருளிப் பேரணி நடைபெறும்.
வரலாற்றுக் கடமையை உணர்ந்து அனைத்துத் தமிழ் மக்களும் இக் கவனயீர்ப்பில் கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கின்றார்கள், தமிழினப் படு கொலைக்கு நீதி வேண்டி ஈருருளிப் பயணத்தை மேற்கொண்டுவரும் தமிழின உணர்வாளர்கள்.
K800_IMG_0097K800_IMG_0108-1K800_IMG_0114K800_IMG_0115

No comments:

Post a Comment