September 15, 2015

சிறுமி படுகொலை – மூவர் தொடர்பில் விசாரணை!

கொடதெனிய சிறுமியின் கொலை தொடர்பான பிரதான சந்தேக நபர்கள் மூவர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பல விசேட காவல்துறை குழுக்கள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் சம்பவத்துடன் தொடர்படையவர்களை விரைவில் கைது செய்ய முடியும் என சிரேஸ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கம்பஹா – திவுலப்பிட்டிய – கொடதெனிய பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் சடலம் உறவினர்களிடம் நேற்று மாலை கையளிக்கப்பட்டுள்ளது.
5 வயதான குறித்த சிறுமியின் பிரேத பரிசோதனையின்போது அவர் கழுத்து நெறித்து கொல்லப்பட்டமையும் அவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment