August 16, 2015

பூநகரியில் கோர விபத்தில் இருவர் பலி! ஐவர் படுகாயம் ( படங்கள் இணைப்பு)

வீதியை விட்டு விலகிய ஹையேஸ் மதிலுடன் மோதியதில் அதில் பயணித்த இருவர் பலியாகினர். அத்துடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் - மீசாலை புத்தூர் சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4
மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. இதில் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த சி.இரவீந்திரன் (வயது 57 ) வல்வெட்டிததுறையை சேர்ந்த சி. செல்வகுமாரன் ( வயது 27) ஆகியோரே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களான ஆனைக்கோட்டையைச் சேர்ந்த சி.விஜயமலர் (வயது 61) இவரின் கணவரான சிறிகந்தவேல் ( வயது, 67) இ.கௌதமன் (வயது 26), செ.சுகிர்தரஞ்சன் (வயது 54), வல்வெட்டித்துறையைச சேர்ந்த செ.செல்வேந்திரன் (வயது 30 ) ஆகியோர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்க கொழும்பிலிருந்து வந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிய வருகின்றது. விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்



No comments:

Post a Comment