வீதியை விட்டு விலகிய ஹையேஸ் மதிலுடன் மோதியதில் அதில் பயணித்த இருவர் பலியாகினர். அத்துடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் - மீசாலை புத்தூர் சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4
மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. இதில் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த சி.இரவீந்திரன் (வயது 57 ) வல்வெட்டிததுறையை சேர்ந்த சி. செல்வகுமாரன் ( வயது 27) ஆகியோரே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களான ஆனைக்கோட்டையைச் சேர்ந்த சி.விஜயமலர் (வயது 61) இவரின் கணவரான சிறிகந்தவேல் ( வயது, 67) இ.கௌதமன் (வயது 26), செ.சுகிர்தரஞ்சன் (வயது 54), வல்வெட்டித்துறையைச சேர்ந்த செ.செல்வேந்திரன் (வயது 30 ) ஆகியோர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்க கொழும்பிலிருந்து வந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிய வருகின்றது. விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. இதில் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த சி.இரவீந்திரன் (வயது 57 ) வல்வெட்டிததுறையை சேர்ந்த சி. செல்வகுமாரன் ( வயது 27) ஆகியோரே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களான ஆனைக்கோட்டையைச் சேர்ந்த சி.விஜயமலர் (வயது 61) இவரின் கணவரான சிறிகந்தவேல் ( வயது, 67) இ.கௌதமன் (வயது 26), செ.சுகிர்தரஞ்சன் (வயது 54), வல்வெட்டித்துறையைச சேர்ந்த செ.செல்வேந்திரன் (வயது 30 ) ஆகியோர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்க கொழும்பிலிருந்து வந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிய வருகின்றது. விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment