August 16, 2015

மாவை சேனாதிராசா தேர்தல் விதி முறைகளை அப்பட்டமாக மீறி இன்று காலை முதல் பிரசாரம்!இரா. செல்வவடிவேல்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட தலைமை வேட்பாளரும், தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தேர்தல் சட்ட விதி முறைகளை அப்பட்டமாக மீறி
இன்று காலை முதல் சூறாவளிப் பிரசாரங்களை முடுக்கி உள்ளார்.
தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகம் நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் தாக்கப்பட்ட சம்பவத்தை சாதகமாக்குகின்ற முயற்சிகளை முன்னெடுத்து தாயக உறவுகளிடம் இவர் அனுதாப வாக்குகளை கோருகின்றார். அத்துடன் புலம்பெயர் உறவுகளிடமும் அனுதாப ஆதரவு கேட்கின்றார்.
நேற்று முன் தினம் இரவுடன் பிரசாரம் முடிவுறுத்தப்பட வேண்டும் என்று தேர்தல் திணைக்களம் கண்டிப்பாக அறிவுறுத்தி உள்ள நிலையில் இவரின் வங்குரோத்து அரசியல் கண்டிக்கப்பட வேண்டியது மாற்றுக் கட்சி வேட்பாளர்களில் ஒருவரான சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் ஊடகங்களுக்கு அறிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment