August 20, 2015

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்களுடன் இளைஞர் கைது

சட்டவிரேதமான முறையில் தங்கம் கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 
சாஜாவில் இருந்து வருகை தந்த குறித்த நபர் விமான நிலைய பேதைப்
பொருள் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரிடமிருந்து 100 கிராமுடைய தங்கக்கட்டிகள் 4 கைப்பற்றப்பட்டுள்ளன. 

ஆதுருப்புவீதிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்கப் பிரிவினரிடம் சந்தேக நபரை ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment