July 17, 2015

தமிழ் தேசிய கூட்டமைப்பு யாருடனும் கூட்டு சேராது – சுரேஷ் பிரேமசந்திரன்!

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எந்த ஒரு அணியுடனும் கூட்டிணைய வேண்டிய அவசியம் இல்லை என்று, அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து செயற்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனை மறுத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த தேர்தலில் மகிந்தவை தோற்கடிக்க வேண்டிய கட்டாயம் காணப்பட்டது.
இதனால் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டி வந்தது. ஆனால் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து போட்டியிடுகிறது. யாருடனும் கூட்டிணைய வேண்டிய அவசியம் இல்லை.
அதேநேரம் தேர்தலுக்கு பின்னர் ஆட்சி அமைப்பதற்கு பிரதான கட்சிக்கு ஒன்றுக்கு தேவை ஏற்படுமாக இருந்தால் வெளியில் இருந்து ஆதரவளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment