July 11, 2015

மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்கியதை எதிர்த்தும், மஹிந்தவுக்கு எதிராகவும் கொழும்பில் ஆர்பாட்டம்.!

மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்கியமைக்கும், மீண்டும் அவர் நாடாளுமன்றத்திற்கு வர மேற்கொள்ளும் முயற்சிக்கும் எதிர்ப்பு தெரிவித்து வீதி எதிர்ப்பு அமைப்பு ஏற்பாடு செய்துள்ள கறுப்பு எதிர்ப்பு இன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புரிமை வழங்கியிருந்தார்.
அதற்கமைய நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கீழ் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவில் கையொப்பமிட்டிருந்தார்.
மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்கியமைக்கும், மீண்டும் அவர் நாடாளுமன்றத்திற்கு வர மேற்கொள்ளும் முயற்சிக்கும் எதிர்ப்பு தெரிவித்து வீதி எதிர்ப்பு அமைப்பு ஏற்பாடு செய்துள்ள கறுப்பு எதிர்ப்பு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்றுள்ளது.
அத்துடன் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்புக் கூட்டமும் நடைபெற்றது.

No comments:

Post a Comment