July 11, 2015

மாணவிகள் ஐந்து பேரை வன்புணர்வு செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்.!

வட­ம­ராட்சி கிழக்கு, குடத்­த­னை­யி­லுள்ள ஆரம்பப் பிரிவு கலவன் பாட­சாலை ஒன்றில் கல்வி கற்கும் 5 மாண­வி­களை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் கைதானஆசி­ரி­யரை எதிர்­வரும் 20ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு பருத்­தித்­துறை நீதிவான் மா.கணே­ச­ராசா உத்­த­ர­விட்டார்.பருத்­தித்­துறை பிர­தேச செய­லக சிறுவர் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தரின் ஆய்வின் பிர­காரம் பருத்­தித்­துறை பொலிஸ் நிலை­யத்தில் செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டினை அடுத்து குறித்த ஆசி­ரியர் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.
நேற்று முன்­தினம் பருத்­தித்­துறை நீதிவான் நீதி­மன்றில் இவர் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து நீதிவான் விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்­டுள்ளார்.

No comments:

Post a Comment