July 12, 2015

விஜயகலாவின் பின்னால் மகிந்த விசுவாசிகள்!

சிறிலங்கா சுதந்திர கட்சியின் முன்னால் உறுப்பினர் குமார் சர்வானந்தன் ஐக்கிய தேசியக் கட்சியில் யாழ்மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.
வடமாகாணத்தேர்தலின் போது சாவக்சேரி நகரப்குதியில் பெரும்
அட்டூழியங்களை அரகேற்றிய சர்வானந்தன் தமிழ் மக்களை மகிந்தருக்கு ஆதரவாக மாற்ற பெரும் முயற்சி மேற்கொண்டதுடன் பல போலியான வாக்குறுதிகளை கொடுத்து ஏமற்று வேலை செய்து வந்தவர் என்றும் அப்போதைய மகிந்த ஆட்சியின் ரவுடித்தனமான நாட்டமை கட்டைபஞ்சயத்து நடத்தி வந்ததுடன் அவருடைய கட்சி அங்கஜன் தந்தையார் இராமநாதனுக்கும் இடையில் பணிப்போர் முற்றி துப்பாக்கி மோதல் ஈடுபட்டு தமது மகிந்த அதிகாரங்களை மக்கள் மத்தியில் மேற்கொண்டவர் பின்னர் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். 

நெல்லியடி வார்த்தக சங்க தலைவர் அகிலதாஸ் மற்றும் மகிந்தின் ஆதரவளர்கள் என்று கூறும் சிலருடன் இணைந்து தமிழ் மக்களை அச்சுறுத்தும் வேலைகளை தனது முதல்பணியாக மேற்கொண்டுவந்தவர். 
பல சட்டவிரோத செயல்களில் ஈடுபாட்டவர் மகிந்த ஆட்சி கவிழ்தபின் தற்போது வியஜகலா மகேஸ்வரனுடன் சேரந்துள்ளார் 
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார் மக்கள் சமுகவிரோதியாக பார்க்கும் இவரை விஜயகலா தலைமையில் யாழ்மாவட்டத்தில் போட்டியிடுவதால் ஐக்கிய தேசிய கட்சி சாவக்சேரி வாக்குகளை இழக்கவேண்டியநிலையில் உள்ளதுடன் மகேஸ்வரனின் மேல் பற்றுள்ள மக்கள் சர்வானந்தன் போட்டியிடுவதை விரும்பவில்லை. என்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர் விசனம் தெரிவித்துள்ளனர்
இம்முறை விஜயகலா மகேஸ்வரன் பாரளுமன்ற பிரவசம் இப்படியான சமூக விரோதிகளை தன்னுடனே சேர்த்திருப்பதால் அவர் தோல்வியை எதிர்கொள்ள நேரிடலாம் என ஆதரவளர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment