July 12, 2015

தமிழீழம் குறித்த எண்ணம் இல்லை - வித்தியாதரன்!

தமிழீழம் குறித்த எண்ணம் தங்களுக்கு இல்லை என்று, முன்னாள் விடுதலைப் போராளிகளின் அரசியல் கட்சியான ஜனநாயக போராளிகள் கட்சி அறிவித்துள்ளது.
அதன் தலைவர் நடேசபிள்ளை வித்தியாதரன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இதனைக் கூறியுள்ளார்.தாங்கள் முழுமையான அரசியல் நீரோட்டத்தில் கலக்கும் நோக்கில் வன்முறைகளையும், தமிழீழ கோட்பாட்டையும் கைவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்ற நிலைப்பாட்டில் இருப்பதாலேயே தாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஆசனத்தை கோரியதாகவும், எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களின் அந்தஸ்த்தை தக்க வைத்துக் கொள்வதற்காக கூட்டமைப்பு தங்களுக்கு மறுப்பு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment