July 11, 2015

தமிழ் மக்களின் 60 ஆண்டுகாலப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் தேர்தல் இது!

கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் இருக்கிற தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைக் காண்பதற்கான முக்கியமான தேர்தலாகதான் நாங்கள் இந்த தேர்தலைப் பார்க்கிறோம்
. – இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்டத்திற்கான வேட்பு மனுவை நேற்று வெள்ளிகிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தபின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
வடக்கு, கிழக்கில் நீடித்த 30 வருட கால போர் எமது மக்களிடம் அரசியல் கைதுகள், காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் விவகாரம், உட்கட்டமைப்பு வசதிகள் எனப் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணும் ஒரு சந்தர்ப்பமாகவே இந்த நாடாளுமன்ற தேர்தலை நாங்கள் பயன்படுத்தப் போகிறோம்.
ஆகவே வன்னி மாவட்ட தமிழ் மக்கள் எங்களுக்கு அமோகமான ஆதரவை வழங்குவார்கள் அதற்கூடாக நாம் குறிப்பிட்ட மிக முக்கியமான இரண்டு பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கு முழு மூச்சாக செயற்படுவோம் -என்றார் 

No comments:

Post a Comment