June 19, 2015

யாழ் வாலிபர் வவுனியா விபத்த்தில் பலி!

வவுனியா ஏ 9 வீதியில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்து வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 12.30 அளவில் டிமோபட்டா ரக வானமொன்று அதிவிரைவாக வந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியுள்ளது. கனகராயன்குள பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து நடந்துள்ளது. டிமோபட்டாவின் சாரதி படுகாயமடைந்து மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியாவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அந்த வாகனத்தில் பயணித்த யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயை சேர்ந்த சிவராசா தனுசியன் (18) என்பவரே உயிரிழந்துள்ளார்.

No comments:

Post a Comment