June 5, 2015

ரவிராஜ் படுகொலை! துப்பாக்கி இராணுவத்தினருடையது: புலனாய்வுப் பிரிவினர்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் இதனை அறிவித்துள்ளனர்.

இதேவேளை, முச்சக்கரவண்டி தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பெனாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டார்.
அத்துடன் இக்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, இலங்கை இராணுவத்துக்கு உரித்துடையது என்று குற்றப்புலனாய்வு பிரிவினர், நீதிமன்றத்தில் தெரிவித்தனர்
மேலும் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 5 சந்தேகநபர்களை எதிர்வரும் 19ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment