பிரான்சில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் உணவு தவிர்ப்பு கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் பாரிஸ் Place de la République பகுதியில நேற்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் இரண்டாவது நாளாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஈகைச் சுடரினை சுவிஸ் லுசான் மாநகரசபை ஊறுப்பினர் தம்பிப்பிள்ளை நமசிவாயம் அவர்கள் ஏற்றிவைக்க பிரான்சு மாவீரர் பணிமனை உறுப்பினர் குணம் மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து தம்பிப்பிள்ளை நமசிவாயம் நினைவுரை ஆற்றினார்.
மாலை 5 மணிவரை குறித்த கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது.
தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை குறித்த கவனயீர்ப்பு நிகழ்வு பாரிஸ் Place de la République பகுதியில் இடம்பெறவுள்ளது.
நாளை மே 18 திங்கட்கிழமை அன்று மாபெரும் பேரணி இடம்பெறவுள்ளது.
இதேவேளை, பிரான்சு செவ்ரோன் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கல் அமைந்துள்ள இடத்தில் காலை 9.30 மணிக்கும் கிளிச்சியில் நினைவுத்தூபி அமைந்துள்ள இடத்தில் காலை 11 மணிக்கும் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்படும்.
No comments:
Post a Comment