April 6, 2015

மிதி வெடியில் மூன்று இராணுவத்தினர் படு காயம்.!

மடு பண்டிவிரிச்சான் பகுதியில் அகற்றப்பட்ட மிதிவெடிகளை செயலிழக்கச் செய்யும் போது அவற்றிலொன்று தவறுதலாக வெடித்ததில் மூன்று இராணுவத்தினர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில்
சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது மடு பண்டிவிரிச்சான் பகுதியில் உள்ள கண்ணிவெடிகள் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அகற்றப்பட்டு வருகிறன.
இவ்வாறு அகற்றப்பட்ட கண்ணி வெடிகளை இராணுவத்தினர் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்போது மிதிவெடியொன்று தவறுதலாக வெடித்துள்ளது. இதில் மூன்று இராணுவத்தினர் காயமடைந்தனர்.

No comments:

Post a Comment