கேரளாவைச் சேர்ந்த 2 ஓரனிச்சேர்க்கை வாலிபர்கள் அமெரிக்காவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த
சந்தீப் என்பவருக்கு கடந்த 2012ம் ஆண்டு டேட்டிங் இணையதளம் ஒன்றின் மூலம்
கேரள மாநிலம்
பாலக்காட்டைச் சேர்ந்த கார்த்திக் என்ற பிராமணர்
அறிமுகமாகியுள்ளார்.முதலில் நட்பாக துவங்கிய அவர்களின் பழக்கம் காலப் போக்கில் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு
அமெரிக்காவுக்கு சென்ற அவர்கள், தங்களின் காதல் பற்றி பெற்றோர்,
உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்ட இருவீட்டார்களில் சிலர் அதிர்ச்சியடைந்தாலும், சிலர் அவர்களின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இறுதியில் இரு வீட்டாரும் அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்த்தையடுத்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இறுதியில் இரு வீட்டாரும் அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்த்தையடுத்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இதையடுத்து இந்த மாதம் கலிபோர்னியாவில்,
சந்தீப் மற்றும் கார்த்திக் பாரம்பரிய இந்து முறைப்படி தங்கள்
குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து
கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment