April 6, 2015

வடக்கு மாகாண முதலமைச்சர் அவுஸ்ரேலியத் தூதுவர் சந்திப்பு!



வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களை அவுஸ்ரேலித் தூதுவர் ரொபின் மூடி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சந்திப்பானது இன்று திங்கட்கிழமை 11.30 மணிக்கு
முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
சந்திப்பில் வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், ஆட்சி மாற்றத்தின் பின்னரான முன்நேற்றங்கள், மீள்குடியேற்ற நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கும் இடையில் நல்லுறவு ஏற்பட தொடர்ந்தும் ஆஸ்திரேலியா முயற்சிகளை மேற்கொள்ளும் என முதல்வரிடம் ஆஸி. தூதுவர் உறுதியாளித்தார் என யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment