April 6, 2015

அடாவடியில் தமிழ் பொலிசும், ஆமியும்!

வடக்கு கிழக்கில் அண்மைநாட்களில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் காவல்துறை மற்றும் படை தொண்டர்கள் உள்ளுர் அடாவடிகளில் முழுதாக ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அவ்வகையில் வடமராட்சி நெல்லியடிப்பகுதியினில் பாடசாலை மாணவியொருத்தியை வீதியினில் வைத்து காவல்துறையினைச் சேர்ந்த ஒருவர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த முற்பட்டமை அம்பலமாகியுள்ளது.
உடுப்பிட்டியிலுள்ள மகளிர் கல்லூரி மாணவியையே பட்டப்பகலில் பின் தொடர்ந்து சென்று பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தமுற்பட்டமை அம்பலமாகியுள்ளது.
இதனிடையே அச்சுவேலிப்பகுதியினிலும் இவ்வாறு வீடொன்றினுள் புகுந்து பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட முற்பட்ட இராணுவ சிப்பாய் பொதுமக்களிடம் அகப்பட்டுக்கொண்டதுடன் பின்னர் தர்ம அடியினை வாங்கியிருந்தார்.
இதேபோன்றை ஈச்சமோட்டைப்பகுதியினில் சனசமூக நிலையக்கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி அதற்கு சேதம் விளைவித்ததாக இதே போன்று தமிழ் இராணுவச்சிப்பாய்கள் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment