April 29, 2015

யாழ்ப்பாணத்தில் ரவுடிகளின் கத்துக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த பொலிஸ் வைத்தியசாலையில்!

யாழ்.மூளாய் பகுதியில் இனந்தெரியாத நபர்களின் கத்திக் குத்திற்கு இலக்காகி பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்


குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் தர அதிகாரியான எஸ்.லியனகே என்பவர் இன்றைய தினம் மாலை 7.3 0 மணியளவில் மூளாய் பகுதியில் உள்ள மதுபானசாலையை அண்டிய பகுதியில் பொலிஸ் ரோந்து நடவடிக்கைக்குச் சென்றிருந்தார்.

இதன்போது அங்கிருந்த குழு ஒன்றுடன் உருவான முரண்பாடு பின்னர் கைகலப்பாக மாறிய நிலையில், அந்தக் குழுவிலிருந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் குறித்த பொலிஸ் அதிகாரியை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் படுகாயமடைந்த குறித்த பொலிஸ் அதிகாரி ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment