April 12, 2015

எமது தொப்புள்கொடி 20 உறவுகளின் படுகொலைக்கு நீதியான விசாரணை வேண்டும் - அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை!

ஆந்திராவில் எமது தொப்புள்கொடி உறவுகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதும் அத்தோடு படுகொலையின் தொடர்பாக வெளிவந்த  புகைப்படங்களும் உலகத் தமிழர்களின் உள்ளங்களை உலுப்பி உள்ளது . இப் படுகொலை என்பது மனிதநேயமற்ற , கொடூரமான , இரக்கமற்ற செயலாகவே பார்க்கவேண்டும் .
 
இப்படுகொலைக்கு நீதியான விசாரணை நடாத்தப்பட்டு , குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை வலியுறுத்துவதோடு, மேலும் உயிர்களை நாம் இழக்கும் நிலை உடனடியாக இல்லாதொழிக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கின்றது . 
 
ஆழ்ந்த துயரில் மூழ்கியிருக்கும் படுகொலை  செய்யப்பட்ட உறவுகளின்  குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அனைத்து தமிழக தொப்புள் கொடி உறவுகளோடும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை  தனது கரங்களை தோழமையுடன் இணைத்துக் கொள்கிறது.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

No comments:

Post a Comment