April 12, 2015

உணர்வாளர் மதியரசன் இயற்கை எய்தினார்!

கரவெட்டிப் பிரதேச சபையின் உறுப்பினராக இருந்து பல்வேறு சமூக பணிகளை ஆற்றிவந்த இன உணர்வாளர் ஆழ்வார்ப்பிள்ளை மதியரசன் இன்று காலை காலமாகியுள்ளார். கூட்டமைப்பு வசமுள்ள கரவெட்டிப்பிரதேச சபையின்
உறுப்பினரான இவர் பல்வேறு சமூகச் செயற்பாடுகளிலும், சபை செயற்பாடுகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டுவந்தவர்.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி மற்றும் மாவீரர் தினத்தன்று சபையினில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியதென பலவற்றை உணர்வு பூர்வமாக அவர் செய்திருந்தார்.இதனால் கடுமையான நெருக்குவாரங்களை எதிர்கொண்டதுடன் படையினரது விசாரணைகளையும் எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

அவரது போராளியான மகன் தொடர்ந்து; தடுத்து வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆறு பிள்ளைகளின் தந்தையான இவர் சுகயீனம் காரணமாக நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையினில் சிகிச்சை பயனளிக்காது மரணமடைந்துள்ளார்.

No comments:

Post a Comment