February 15, 2015

விமான நிலையங்களிலிருந்து விமானப்படையினர் அகற்றப்படுவர் !"

விமான நிலையங்களிலிருந்து விமானப்படையினரை
அகற்றிக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் விமான நிலையங்களின் பாதுகாப்பு கடமையில் விமானப்படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய விமான சேவைகள் மற்றும் துறைமுக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் ரத்மலானை உள்ளிட்ட உள்ளுர் விமான நிலையங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள விமானப்படையினர் அகற்றிக்கொள்ளப்பட உள்ளனர்.

பதினான்கு விமான நிலையங்களிலிருந்து இவ்வாறு விரைவில் விமானப்படையினர் அகற்றிக்கொள்ளப்பட உள்ளனர்.

விமான நிலையங்களில் விமானப்படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதனால் விமான நிலையத்தின் காணிகளை அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு விமான நிலையங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குவதன் மூலம் பாரியளவில் வருமானத்தை திரட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment