April 12, 2015

மகிந்தவின் மருமகனை கைது செய்ய இன்டர்போல் உதவி!

ஆயுதக்கடத்தலில் ஈடுபட்ட மகிந்தராஜபக்ஷவின் மருமகன் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கு இன்டர்போலின் உதவி கோரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கான தூதுவராக இருந்த அவர், யுக்ரெயின் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை விநியோகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.
இந்த நிலையில் அவரை கைது செய்ய இன்டர்போலின் உதவி தேவைப்படும் பட்சத்தில் அதற்கு கோரிக்கை விடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment