December 28, 2014

வடமாகாண சபையின் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கோரி சிறிலங்காவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு!

வடமாகாண சபையின் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கோரி சிறிலங்காவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடமாகாண சபையின் உறுப்பினர்கள் அனைவரும் கைச்சாத்திட்டு, இது தொடர்பான கடிதம் ஒன்றை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது மாகாண சபை உறுப்பினர்கள் அதிக அளவில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் ஏனைய மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற காவற்துறை பாதுகாப்பினை போல தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment