October 25, 2014

மோடி – விக்னேஸ்வரன் இடையிலான சந்திப்பை அடுத்த மாதம் ஏற்படுத்திவிட இந்திய அதிகாரிகள் முயற்சி!

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பை அடுத்த மாதம் ஏற்படுத்திவிட இந்திய அதிகாரிகள்
முயற்சிக்கின்றனர்.

இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் 8ம் திகதி நடைபெறும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக சீ.வி.விக்னேஸ்வரன் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த அழைப்பை விக்னேஸ்வரன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

எனினும் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதில் சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பில் சிக்கலை ஏற்படுத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அடுத்த மாதத்திற்குள் நரேந்திரமோடியையும், விக்னேஸ்வரனையும் சந்திக்க செய்வதற்கான ஏற்பாடுகளை இந்திய அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment