September 9, 2014

யாழ் புத்தூர் வீதியில் இரவு பஸ் குடைசாய்ந்தது !

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ், புத்தூர் வீதியில்,  (08.09.2014) இரவு வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்ததில்
ஒருவர் பலியாகியுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் மேலும் 20 பேர் வரை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவத்தில் மானிப்பாய் கட்டுடையை சேர்ந்த என். சதீஸன் (வயது 24) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
வளைவு ஒன்றில் திரும்பும் போது, பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மற்றும் யாழ். போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.Bus Bus-01

No comments:

Post a Comment