August 26, 2014

நோர்வேயிய மக்களின் கொண்டாட்டமும் ஈழத்தமிழரின் கலைகளும்!

24.08.14 ஞாயிற்றுக்கிழமை அன்று திறம்மனில் நடைபெற்ற elvefestival இல் திறம்மன் அன்னை பூபதி வளாகத்தின் அழைப்பை ஏற்று நோர்வே தமிழ்
மகளிர் அமைப்பினர் திறம்மன் elvefestival இல் சிற்றுண்டிச்சாலை நடாத்தினர்.
இதற்கு கணிசமான அளவு நோர்வேஐpய மக்களும் வேற்று நாட்டு மக்களும் வந்து சிற்றுண்டிகளை சுவைத்து மகிழ்ந்தனர். எமது நாட்டு உணவான அப்பம் தோசை வடை என்பனவற்றை அவர்கள் ரசித்து ருசித்து உண்டதே கண்கொள்ளாக் காட்சி. சில வயோதிப நோர்வேஐpயர்கள் மகளிர் அமைப்பினர் அணிந்திருந்த சேலையின் அழகு குறித்து விமர்சித்தனர் இன்னும் சிலரோ நீங்கள் வரும் வருடமும் சிற்றுண்டிச்சாலை நடத்துவீர்கள் தானே என்று வினா எழுப்பினர்.
இதைத் தவிர திறம்மன் ஒஸ்லோ அன்னைபூபதி வளாக மாணவர்களால் இனியம் அணிநடை போன்றும் மேடையிலும் நடாத்தப்பட்டது. அத்துடன் இளையோர் அமைப்பினராலும் ஓர் நடன நிகழ்ச்சி வழங்கப்பட்டது எமது மாணவர்களின் ஆடை அலங்காரமும் அவர்களின் நடன அசைவும் தாளக் கட்டும் பார்வையாளர்களை மிகுந்த அளவில் கவரக்கூடியதாக இருந்தது.
திறம்மனில் பெரியஅளவிலான நோர்வேஐpய விழா ஒன்றில் ஈழத்தமிழருக்கு சிற்றுண்டிச் சாலை அமைப்பதற்கு உரிமையும் எமது கலாச்சார நிகழ்ச்pகளை மேடை ஏற்றவும் எமது தமிழ் மாணவி ஒருவரால் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்பட்டதும் இதுவே முதல்முறையாகும் வரும் காலங்களுளிலும் எமது நிகழ்வுகள் இன்னமும் பலமானதாகவும் சிறப்பானதாகவும் இருக்கும்

No comments:

Post a Comment