August 26, 2014

புல்மோட்டையிலும் விகாரைக்கு நிலம் சுவீகரிப்பு!

கிழக்கின் புல்மோட்டை அரிசிமலை விகாரைக்கு காணி அளவை செய்தல் சம்பந்தமாக உள்ளுர் பிரதேச வாசிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இடையே
முறுகல் தோன்றி உள்ளது. பதற்றமான சூழ்நிலை அங்கு நீடிக்கின்ற நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த மேலதிக காவல் துறையினரும், படையினரும் அங்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களிற்கு சொந்தமான காணிகளை ஆக்கிரமித்தே விகாரை மற்றும் பன்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதனை விஸ்தரிக்க ஏதுவாக இன்று அளவைகள் மேற்கொள்ள ஏதுவாகியிருந்தது. நில அளவை பணிகளை மேற்கொள்ள ஏதுவாக நில அளவை பணியாளர்கள் வருகை தந்திருந்தனர்.

இக்காணி சுவீகரிப்பிற்கு எதிராக தமது எதிர்ப்பை தெரிவித்து அப்பகுதி மக்களால் வழமைமறுப்புப் போராட்டம் அனுஸ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment