மூன்று முக்கிய ஆசிய நாடுகளின் தலைவர்கள், அடுத்த சில மாதங்களில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபே அடுத்த மாதம் 9ம் நாள் உரையாற்றவுள்ளார்.
அதையடுத்து, சீன அதிபர் ஜி ஜின்பின் சிறிலங்கா வரவுள்ளார்.
அவர், வரும் செப்ரெம்பர் 18ம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார்.
எனினும், அவரது உரை நாள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி மாதம், சிறிலங்காவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரும் கூட நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்றும் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இதுவரை எட்டு நாடுகளின் தலைவர்கள் உரையாற்றியுள்ளனர்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபே அடுத்த மாதம் 9ம் நாள் உரையாற்றவுள்ளார்.
அதையடுத்து, சீன அதிபர் ஜி ஜின்பின் சிறிலங்கா வரவுள்ளார்.
அவர், வரும் செப்ரெம்பர் 18ம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார்.
எனினும், அவரது உரை நாள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி மாதம், சிறிலங்காவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரும் கூட நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்றும் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இதுவரை எட்டு நாடுகளின் தலைவர்கள் உரையாற்றியுள்ளனர்.
No comments:
Post a Comment