July 30, 2014

பூங்குழலியின் இயக்கத்தில் "தீ வரைவு" ஆவணப்படம் திரையிடல்!

கருந்திணை தயாரிப்பில் பூங்குழலியின் இயக்கத்தில் "தீ வரைவு" ஆவணப்படம் திரையிடல் சென்னை
நாள் - ஆகஸ்டு 3, 2014, ஞாயிறு - மாலை 5 மணி

இடம் - கவிக்கோ அரங்கம், இரண்டாவது முதன்மைச் சாலை, சி. அய். டி. காலனி,
மியுசிக் அகாடமி அருகில், மைலாப்பூர், சென்னை
நமது பண்பாட்டில் உறவுகளை நிலைநிறுத்துவதற்கும், புதிய உறவுகளை உருவாக்குவதற்கும் திருமணம் ஒரு முக்கிய களமாக இருக்கிறது. இந்த திருமணமுறையானது உறவுகளை மட்டுமல்ல, ஜாதியையும் நிலை நிறுத்திவருகிறது. பலநூற்றாண்டுகளாக ஜாதிக்குள் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் மண உறவுகள், சமுதாயத்தில் உடல்ஊனம், மன ஊனம், மருத்துவ ஊனங்களை அதிகமாக்கிவருகிறது.
தொடர்ச்சியாக ஜாதிக்குள் நடைபெற்றுவரும் திருமண முறையால், உருவாகும் அடுத்தத் தலைமுறை, உளவியல், உடலியல் ரீதியாக எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை மருத்துவ, மரபணு மற்றும் மானுடவியல் அறிஞர்களின் மூலம் விளக்குகிறது இந்த ஆவணப்படம்.
இப்படத்தை மாணவர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் பரவலாக எடுத்துச் செல்ல உங்கள் ஆலோசனைகளை வழங்க அவசியம் வாருங்கள்.
தோழமையுடன் அழைக்கும்
கருந்திணை
தொடர்புக்கு - 9445056245, 9444209355, 9787313222

No comments:

Post a Comment