May 19, 2014

த.தே.ம.மு உறுப்பினர்கள் முள்ளிவாய்க்காலில் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு சுடரேற்றி வணக்கம்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் முள்ளிவாய்க்காலில் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தும் நிகழ்வு
இன்று இடம்பெற்றது.



தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் இன்று காலை முதல் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டது. கட்சி உறுப்பினர்களோ, ஆதரவாளார்களோ, பொது மக்களோ கட்சி அலுவலகத்தினுள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
அதன் காரணமாக  திட்டமிட்டபடி நினைவேந்தல் நிகழ்வை அங்கு நடாத்த முடியாத நிலை ஏற்பட்டது.
உளவுத் துறையினரது கடுமையான கண்காணிப்பையும் தாண்டி கட்சியினால் பிரத்தியேகமான ஓர் இடத்தில் நினைவு வணக்க நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது

No comments:

Post a Comment