May 8, 2014

கொம்பனி சூது நிலையத்தில் பெண்கள் உட்பட 34 பேர் கைது…


கொழும்பு கொம்பனி வீதியில் இயங்கி வந்த சட்டவிரோத சூது நிலையம்
ஒன்றை இன்று (08) மாலை 6 மணியளவில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது பெண் ஒருவர் உள்ளிட்ட 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்கவின் ஆலோசனைக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. சூது நிலையத்தில் இருந்த 26 ஆண்களும் ஒரு பெண்ணும் 7 ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.police-at-night

No comments:

Post a Comment