May 8, 2014

யாழ்.மாம்பழம் சந்தியில் இளைஞன் பலி!

வேகக்கட்டுப்பாட்டினை இழந்து மோட்டார் சைக்கிளொன்று யாழ்.மாம்பழம் சந்தியிலுள்ள பாலத்துடன் மோதியதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன்
, மேலும் ஒரு இளைஞன் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
நெடுங்குளத்தினைச் சேர்ந்த சுரேஸ்வரலன் சுரேகன் (23) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், அதேயிடத்தினைச் சேர்ந்த எஸ்.கரன் (21) என்ற இளைஞன் படுகாயமடைந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment