April 25, 2014

வடக்கில் பெண்கள் காவல்துறையில் அதிகம் இணைக்கப்படும்!

வடக்கில் உள்ள பெண்களை காவல்துறையில் அதிகம் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை தொடங்கவுள்ளதாக யாழ் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட முதன்மை காவல்துறை அதிகாரி விமலசேன இதனை தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் 500 பெண்கள் காவல்துறையில் இணைத்துக்கொள்ள படவுள்ளார்கள் இதில் 400 போ் கன்ஸ்டபில்கள் ஆகவும்,100 பெண்கள் காவல் பரிசோதகர்கள் ஆகவும் இணைத்துக்கொள்ள படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் காவல்துறையில் இணைவதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும் பட்சத்தில் வடமாகாணத்திலேயே அவர்களுக்கான பயிற்சிமுகாம் அமைத்து பயிற்சி வழங்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment