July 23, 2016

தமிழர்களை அடக்கி இன்பமாக வாழலாமென்று சிங்களவர் நினைக்ககூடாது!கி.துரைராஜாசிங்கம்

சிங்களவர்கள் நினைக்கக்கூடாது தாங்கள் தமிழர்களை அடக்கிக்கொண்டு இந்த நாட்டிலே இன்பமாக வாழமுடிமென்று என தமிழரசிக் கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜாசிங்கம் தெரிவித்தார்.


மட்டக்களப்பு கோரகல்லிமடு ஸ்ரீரமண மகரிஷிசி பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு இவ்வாறு தொவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில்,

இன்றைய காலகட்டத்தில் அரசியலில் பல மாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

தென்னகத்திலே இருக்கின்ற பெரும்பான்மை மக்களுடன் சகோதரர்களாக வாழ இருக்கின்றோம், வாழப்போகின்றோம், வாழ்வதற்கு தயாராகிவிட்டோம் என்கின்ற செய்தி அவர்களுக்கு கிடைக்கின்றபோது தான் இந்த நாட்டிலே இரண்டு சமூகங்களும் சமாதானமாக வாழ முடியும் அப்போதுதான் சமாதானம் நிலைக்கும்.

இந்த நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டுமென்றால் தமிழ்களின் கரமும் அங்கு பலப்படுத்தவேண்டும்.

இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தனிப்பட்ட ரீதியில் பெரும்பான்மை மக்களினால் மட்டும் முடியாது.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தமிழர்கள் தயார் என்கின்ற செய்தி தற்பொழுது ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசியலமைப்பு சட்டத்திலே தமிழ்கள் கேட்கின்ற விடயங்களை நீதியானதும் நியாயமானதுமான விடயங்களை அரசியலமைப்பிலே கொடுப்பதன் மூலமாகத்தான் முடியும். இந்த செய்தியை நாங்கள் தென்னகத்திற்கு சொல்லியிருக்கின்றோம் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment