July 23, 2016

பனாமா ஆவணங்களில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த வித்தியா அமரபால மீண்டும் பதவியில்!

பனாமா ஆவணங்களில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த வித்தியா அமரபால மீண்டும் பதவியில் அமர்த்தப்பட உள்ளார். மேல் மாகாண நகர அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகராக வித்தியா அமரபால கடயைமாற்றியிருந்தார்.


பனாமா ஆவணங்கள் வெளியிடப்பட்டதனைத் தொடர்ந்து வித்தியா அமரபால தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.வித்தியா அமரபால தொடர்பில் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தனர்.

இந்த விசாரணைகளின் போது வித்தியா அமரபால குற்றமற்றவர் எனவும் எந்தவிதமான நிதி மோசடிகளிலும் தொடர்புபடவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 25ம் திகதி முதல் மீளவும் அமைச்சின் ஆலோசகர் பதவியில் வித்தியா அமரபால இணைந்து கொள்ள உள்ளார்.

வித்தியா அமரபால நிதி மோசடிகளில் ஈடுபட்டமைக்கான எந்தவொரு ஆதாரங்களும் சாட்சியங்களும் கிடையாது என நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment