July 23, 2016

கிளிநொச்சியில் மாபெரும் தொழிற்சந்தை!

கிளிநொச்சி மத்தியகல்லூரி மைதானத்தில் கேயார் நிறுவனத்தினதும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின்   அனுசரனையிலும்   ஏற்பாடு செய்யப்பட்ட வணிக கண்காட்சியும் தொழிற் சந்தையும் இன்று (23-07-2016) பகல் 9-30 மணிக்கு ஆரம்பமாகி இருநாட்கள்  நடை பெறவுள்ளன.


இதன் ஆரம்பநிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக விவசாயஅமைச்சர் பொ.ஜங்கரநேசன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைத் தொடக்கி வைத்தனர்

இத்  தொழிற்  சந்தை   உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான  சந்தை  வாய்ப்பை  ஏற்ப்படுத்திக்  கொடுக்கும் நோக்குடன் ஏற்பாடு   செய்யப்பட்டுள்ளதுடன்  இதன்  பங்காளர்களாக  கரிகணன் பிரிண்டேஸ்  மற்றும் தேசிய  இளைஞர் சேவை     மன்றத்தின்  கிளிநொச்சி  அலுவலகத்தினரும்  செயற்ப் பட்டுக்கொண்டுள்ளனர்.







No comments:

Post a Comment