July 23, 2016

கிளிநொச்சி காட்டுப்பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி முறியடிப்பு!

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை மற்றும் கல்லாறு பகுதியில் சட்டவிரோதமான மது உற்பத்திகள் கிராம வாசிகளின் தகவல் அடிப்படையில் தருமபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான பொலிஸ் அணியினரினால் முறியடிக்கப்பட்டுள்ளது.


பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கு அமைய இன்று 23.07.2016 (சனிக்கிழமை) காலை விசேட சுற்றிவளைப்பினை மேற்கொண்ட தருமபுரம் பொலிஸார், புளியம்பொக்கணைப் பகுதியில், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளனர்.

அத்துடன், 28 போத்தல் கசிப்பினையும், கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்திய உற்பத்தி பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, குறித்த பகுதியிலிருந்து, 20 போத்தல் மது பாணத்தினை எடுத்து சென்ற நபர் ஒருவர் கல்லாறு பகுதியில் வைத்து, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும், பொருட்களும் நாளை கிளிநொச்சி பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்த உள்ளதாக தருமபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.







No comments:

Post a Comment