May 20, 2016

ராஜ­ப­க் ஷ­வுக்கு உளவு பார்க்கும் அமைச்­ச­ருக்கு என்ன நடக்கும் என்று பாருங்கள்-ராஜித!

எமது அமைச்­ச­ர­வைக்­குள்­ளேயே ஒரு­ சிலர் இருந்துகொண்டு அர­சாங்க மட்­டத் தில் பேசப்­படும் விட­யங்­களை முன்னாள் ஜனா­தி­ப­திக்கு வழங்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். இது
மாபெரும் துரோ­க­மாகும். அந்த அமைச்­ச­ருக்கு விரைவில் என்ன நடக்­கின்­றது என்று பாருங்கள் என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.
கடந்த ஆட்­சி­யா­ளர்­களின் ஊழல் நட­வ­டிக்­கை­யினால் ஏற்­பட்­டுள்ள நிதி நெருக்­க­டியை சமா­ளிக்க எம்மை ஆட்­சிக்குக் கொண்­டு­வந்த மக்­க­ளிடம் அதி­க­ரித்த வரியை அற­விட்டு நாம் பழி­வாங்­கு­கின்றோம். இப்­படி மக்­க­ளுக்கு தண்­ட­னையை வழங்­கு­வது நியா­ய­மற்­றது என்றும் அவர் குறிப்­பிட்டார்.
அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
இலங்­கையில் ஊட­க­வி­ய­லா­ளர்­களும் அர ­சி­யல்­வா­தி­களைப் போன்றே செயற்­பட்டு ­வ­ரு­கின்­றனர். அர­சி­யல்­வா­தி­க­ளை­விட முன் னாள் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரியைப் பாது­காக்கும் தேவை ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு காணப்­ப­டு­கின்­றது. அந்த அதி­காரி காலை ஒன்­பது மணி­முதல் மாலை நான்கு மணி­வரை வங்­கி­யி­லி­ருந்து பணத்தை மீளப்­பெற்­ றுள்ளார்.
இது தொடர்பில் நிதி குற்றப் புல­னாய்வு பிரி­விடம் நாம் முறைப்­பாடு செய்­த­போது நிதிப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவு மத்­தி­ய­ வங்­கியின் நிதி ­வி­சா­ர­ணைப்­பி­ரி­விடம் விசா­ரித்­துள்­ளது. அப்­போது அங்­கி­ருந்த புல­னாய்வு அதி­காரி குறித்த தினத்தில் குறித்த வங்­கி­யி­லி­ருந்து எவ்­வி­த­மான பணக்­கொ­டுக்கல் வாங்­கலும் இடம்­பெ­ற­வில்­லை­யெனக் கூறியுள்ளார். அதனால் நிதி குற்றப் ­பு­ல­னாய்வுப் பிரிவு விசா­ர­ணை­களை தொட­ர­வில்லை.
இது தொடர்­பி­லேயே அனைத்துத் தக­வ ல்­க­ளையும் பெற்றுத் தரு­மாறு அமைச்ச­ர வைப்பத்­தி­ரத்தை சமர்ப்­பித்தோம். ஆனால் இந்த விட­யத்தை அமைச்­ச­ர­வைக்­குழு கொண்­டு­வ­ர­வேண்­டு­மென ஜனா­தி­பதி கூறி னார். எவ்­வா­றெ­னினும் நிதி ஊழல்கள் தொடர்பில் தான் மிகவும் அக்­க­றை­யுடன் இருப்­ப­தாக ஜனா­தி­பதி தெரி­வித்தார்.
எமது அமைச்­ச­ர­வைக்­குள்­ளேயே ஒரு­ சிலர் இருந்துகொண்டு அர­சாங்க மட்­டத் தில் பேசப்­படும் விட­யங்­களை முன்னாள் ஜனா­தி­ப­திக்கு வழங்­கிக்­கொண்­டி­ருக்­கின் றார். இது மாபெரும் துரோ­க­மாகும். அந்த அமைச்­ச­ருக்கு விரைவில் என்ன நடக்­கின்­றது என்று பாருங்கள்.
கேள்வி:- அவரின் அமைச்சர் பதவி பறி­போ­குமா?
பதில்:- பொறுத்­தி­ருந்து பார்ப்போம். காலம் அனைத்­திற்கும் பதில் சொல்லும்.
இதே­வேளை கடந்த அர­சாங்­கத்தின் ஆட்­சியின் போது அதி­க­ளவு நிதி ஊழல் செய்­யப்­பட்­டுள்­ளது. ஆனால் யாரையும் பிடிக்க முடி­ய­வில்லை. அப்­ப­டியே பிடித்­து­விட்­டாலும் பிணையில் விடு­த­லை­யாகிச் செல்­கின்­றனர். விடு­த­லை­யாகிச் செல்­வது மட்­டு­மன்றி அறிக்­கை­க­ளையும் விடுக்­கின்­றனர். ஆனால் நாங்­களோ மாற்­ற த்­திற்கு வித்­திட்ட மக்­க­ளையே பழி­வாங்கிக் கொண்­டி­ருக்­கின்றோம்.
அதா­வது கடந்த ஆட்­சி­யா­ளர்கள் திரு­டிய பணத்­தினால் ஏற்­பட்ட நிதி நெரு க்­க­டியை சமா­ளிக்க நாம் மக்­க­ளிடம் அதி­க­ரித்த வரியை அற­வி­டு­கின்றோம். இது­வொ­ரு­வ­கையில் மக்­க ளைப் பழி­வாங்கும் செய­லாகும். வேறு­வ­ழி­யின்றி நாங்கள் இதனை செய்­து­கொண்­டி­ருக்­கின்றோம். எம்மை ஆட்­சிக்குக் கொண்­டு­வந்த மக்­களை வரியை அதி­க­ரித்து நாம் பழி­வாங்­கு­கின்றோம். இப்­படி மக்­க­ளுக்கு தண்­ட­னையை வழங்­கு­வது நியா­ய­மற்­றது. இந்த விட­யத்தில் ஊட­க­வி­யலா­ளர்­களும் பொறுப்­புடன் நடந்­து­கொள்­ள­ வேண்டும்.
ஊட­க­வி­ய­லா­ளர்கள் முன்­வந்து விட­யங்­களை ஆராயவேண்டும். வெளிநாடுகளில் அவ்வாறு தான் இடம்பெறுகின்றது. லசந்த விக்கிரமதுங்க போன்றதொரு ஊடகவிய லாளர் இப்போது நாட்டில் இல்லை. அத னையிட்டு நான் கவலையடைகின்றேன். எங்களால் தனித்து எதனையும் செய்யமுடி யாது. ஊடகவியலாளர்கள் எமக்கு ஒத்து ழைப்பு வழங்கவேண்டும். ஊழல் குற்றச் சாட்டுக்கள் குறித்த விசாரணைகளை துரி தப்படுத்தவே நாங்கள் புதிய சட்டமா அதிபரை நியமித்து அவற்றைப் பொறுப்புக் கொடுத்தோம்.

No comments:

Post a Comment