August 2, 2016

மாந்தை மனித புதைகுழிக்கு அருகிலுள்ள கிணற்றை தோண்டும் பணி நாளை மீண்டும் ஆரம்பம்!

மன்னார்- திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழிக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட கிணற்றை அகழும் நடவடிக்கை இன்று மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டுள்ளதுடன், மீண்டும் குறித்த கிணற்றின் அகழ்வுப்பணிகள் நாளை காலை 8 மணிக்கு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம் பெறவுள்ளது.
திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிக்கு சற்று தொலைவில் கண்டு பிடிக்கப்பட்ட கிணற்றை அகழும் பணிகள் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.

 
முழுமையாக மூடப்பட்ட குறித்த கிணற்றை அகழ ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் சிறிய இரண்டு எலும்புத்துண்டுகள் தடயங்களாக மீட்கப்பட்டன. எனினும் அதற்கு பின்னர் எவ்வித தடயங்களும் மீட்கப்படவில்லை. இந்த நிலையில் குறித்த கிணற்றின் அகழ்வு பணிகள் நாளை காலை 8 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment