August 4, 2016

பொருளாதார மத்திய நிலைய விவகாரம்- அபிவிருத்திக் குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு கோரிக்கை!

வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்காக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் கூட்ட வேண்டும் என வவுனியா மாவட்ட பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
வவுனியா மத்தியஸ்த சபையின் தலைவர் எஸ். வரதகுமார் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இதுதொடர்பிலான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 
இதன்போது மூன்று முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த தீர்மானங்களை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கையளிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 35 பேர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் ஒருமித்த கருத்தாக வவுனியா நகருக்கு வடக்கு பக்கமாகவுள்ள எந்த பகுதியில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டாலும் அதனை ஏகமனதாக ஏற்றுக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment