July 1, 2016

சுண்டிக்குளம் காட்டுப்பகுதியில் ஆர்பிஜி செல்கள் மீட்பு!

சுண்டிக்குளம்  காட்டுப்பகுதியில்  விறகுவெட்டச்  சென்றவர்கள்  ஆர்பிஜி  ரக   செல்கள்   இருப்பதாக  தர்மபுரம்  பொலிசாருக்கு   இன்று புதன் கிழமை     வழங்கிய  தகவலுக்கு  அமைய  பொலிசார்  இன்று  காலை  தேடுதல்  நடவடிக்கை  ஒன்றை  மேற்க் கொண்டிருந்தனர்.


குறித்த  காட்டுப்  பகுதியில்  விடுதலைப்  புலிகளால்  பாவிக்கப்பட்டது என சந்தேகிப்படும் காவலரணுக்கருகில்  நான்கு ஆர்பிஜி ரக  செல்கள்  இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதன் பின்னா் குறித்த செல்களை மீட்டு செயழிக்க வைப்பதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற அனுமதி பெறப்பட வேண்டும் என்பதனால் தா்மபுரம் பொலீஸாா் குறித்த அனுமதியை பெற்று அதனைஅகற்றும் பணியில்  ஈடுப்பட்டு வருகின்றனா்.





No comments:

Post a Comment