July 19, 2016

திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க வந்தாரா நிஷா பிஸ்வால்? - உதய கம்மன்பில !

நிஷா பிஸ்வால் இலங்கைக்கு 6 தடவைகள் வந்தது உள்ளுரில் மாப்பிள்ளை தேடுவதற்கு அல்ல என்று பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ராஜகிரியிவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

 
அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் உதவி செயலாளர் நிஷா பிஸ்வால் அண்மையில் இலங்கைக்கு வந்து சென்றார். 20 மாதங்களில் 6 தடவைகள் அவர் இலங்கைக்கு வந்து சென்றதாக குறிப்பிட்டார். அவர் ஏன் இங்கு வந்தார? தனது திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கவா? இல்லை. சிலாபம் பக்கம் தென்னம் தோப்பை வாங்கி, பின்னர் அந்த பக்கம் போகும் போது அதனை பார்த்துக் கொள்ளும் கங்கானி ஒழுங்காக செயற்படுகின்றாரா? என்பதை கண்காணிக்கும் வழக்கம் எமது செல்வந்தர்கள் மத்தியில் உள்ளது.

இதே போன்று நிலைமையில் தான் இன்று இலங்கை உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கங்காணியின் வேலையை தான் செய்கின்றார். அமெரிக்காவின் தோட்டமாக இலங்கை உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கை இந்தியாவிற்கும் நாட்டின் ஏனைய பகுதிகளை அமெரிக்காவும் தனதாக்கிக்கொள்ளும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது. நாடு பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ள நிலையில் இலங்கை பாரிய முன்னேற்றம் கண்டுள்ளதாக நிஷா பிஸ்வால் கூறுகின்றமை ஆச்சரியம் அளிக்கின்றது. அடுத்த தடவை அவர் இலங்கை வந்தால் நிச்சயம் நிஷா பிஸ்வாலின் மூக்கு கண்ணாடியை வாங்கி நான் போட்டு பார்க்க வேண்டும் என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment