July 17, 2016

நெடுங்கேணி மத்திய பேரூந்து நிலையத்திற்குள் பேரூந்துகள் செல்ல முடியாத நிலை[படங்கள் இணைப்பு]

நெடுங்கேணி மத்திய பேரூந்து நிலையத்திற்குள் பேரூந்துகள் செல்ல முடியாத நிலைக்கு கற்களால் பரவப்பட்டுள்ளது.

நெடுங்கேணி பேரூந்து நிலையத்தில் கடந்த ஆண்டு நெடுங்கேணி பிரதேசசபையினால் கற்கள் பறிக்கப்பட்டு பரவப்பட்ட நிலையில் அதற்கு தார் ஊற்றி பேரூந்துகள் செல்வதற்கு இடையூறாக இருக்கிக்றது.
இதனால் பேரூந்துகள் செல்லும் போது தூசிகள் எழும்பி பொதுச்சந்தைக் கடைகள் பேரூந்து கடைகள் உள்ள உணவுக் கடைகளுக்கு செல்வதனால் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகின்றது.
பேரூந்துகள் செல்லும் போது பேரூந்துகளின் ரயர்களில் கற்கள் குற்றப்பட்டு காற்றுப் போவதாலும் இதனைக் கருத்திற் கொண்டு பேரூந்துக்கூடாகச் செல்லும் ஒரு சில பஸ்கள் ரயர் பாதுகாப்பு கருதி பேரூந்து நிலையத்திற்கூடாக செல்வதில்லை. இதனால் நெடுங்கேணி மத்திய பேரூந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
விரைவாக நெடுங்கேணி பிரதேசசபைச் செயலாளர் கவனத்தில்எடுத்து விரைவாக செப்பனிட்டு தரும்படி பேரூந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment