July 24, 2016

திருக்கேதீஸ்வரம் டிசம்பரில்ஆலயத்தின் குடமுழுக்கு!

வரலாற்றுப் பிரசித்தி பெற்றதும் பாடல் பெற்ற தலமுமான மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் குடமுழுக்கு வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ளது.

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை கருங்கல்லால் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய அரசின் நிதியுதவியில் செயற்படுத்தப்படும் கற்றளிப் பணிகள் விரைவில் நிறைவடையவுள்ளன.
இதனால் வரும் டிசம்பர் மாதம் இக்கோயிலின் குடமுழுக்கு இடம்பெறும் என யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதுவர் ஏ.நடராஜன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment