July 1, 2016

தற்கொலை நாடகமாடிய பிரதியமைச்சருக்கு மாரடைப்பு!

பாடசாலை ஒன்றில் தூக்கு மாட்டி தற்கொலை நாடகமாடிய பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும நேற்றுமாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, ஆபத்தான நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நவலோக்க தனியார் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் நேற்று இரவு 7.30 அளவில் பிரதியமைச்சர் அனுமதிக்கபட்டதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 
மத்துகம மீகாதென்ன ஆரம்ப பாடசாலை நிர்வாகம் தரம் ஒன்றுக்கு விண்ணப்பித்தவர்களில் 10 பேரை சேர்த்துக்கொள்ள மறுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உள்துறை மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும மத்துகம வலையக் கல்விப் பணிமனைக்கு எதிரில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். கல்வியமைச்சின் அதிகாரிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வெற்றியளிக்காமையினால் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும நேற்று தூக்கு மாட்டி தற்கொலை நாடகமாடினார்.

இதனையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மீகஹதென்ன தேசிய வைத்தியசாலை மற்றும் நாகொட வைத்தியசாலைகளில்க்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று இரவு 7.30 அளவில் விசேட அம்பியூலன்ஸ் ஊடாக கொழும்பு – நவலோக வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவிருப்பதாக பிரதியமைச்சரின் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.


No comments:

Post a Comment